மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மின் காற்றாலை , கனயவள மணல் அகழ்வு செய்ய முடியாது

மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன் னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார் நகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (03.01) பிற்பகல் 2 மணியளவில் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் மன்னார் ரயில் போக்குவரத்து சேவைகள்இ திண்மக் கழிவு அகற்றுதலில் உள்ள சிக்கல்கள்இ காற்றாலை மின்சார திட்டம்இ மற்றும் கனியவள மண்ணகழ்வு போன்ற பிரச்சனைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

மன்னார் தீவில் மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை திட்டத்தினை இச் சபையில் விளக்குவதற்கு அத்திட்டத்தின் முகாமையாளர் முயன்ற போது இதில் கலந்து கொண்ட கிராம மட்ட பிரதிநிதிகள் இ பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இ மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் இக்கூட்டத்தில் பெரும் சலசலப்பும் ஏற்பட்டது.

இதன் போது காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவிக்கையில் மக்கள் விரும்பாத ஒரு செயற்பாட்டினை தொடர்ந்ததும் முன்னெடுக்க முடியாது .எனவே இந்த திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும்

எனவே இந்த காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் . மேலும் இந்த நடவடிக்கை தொடருமாயின் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எனவே அதை நிறுத்துவது சிறந்தது எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதுடன்

மேலும் எதிர் வருகின்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடையங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.