(எருவில் துசி) ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை நாவற்குடா பிரதேசத்தில் பெரும் சோகம்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தைச்சேர்ந்த இ.கத்தரீனா (23) என்பவரே தனது வீட்டின் அறையினுள் தூக்கிட்;ட நிலையில் தூக்கில் இருந்து மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார்
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கு அமைவாக பிரேதத்தை பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
கையளிக்கப்பட்டது.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.