திருக்கோவில் பிரதேச செயலகம் மீண்டும் தேசியரீதியில் சாதனை படைத்துள்ளது
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் அதிகளவான அங்கத்தவர்களை இணைத்துக் கொண்டதில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலகமானது அம்பாறை மாவட்டத்தில் முதலாவது இடத்தினையும் தேசியரீதியாக மூன்றாவது இடத்தினையும் பெற்றுள்ளது .
குறித்த பிரதேச செயலகமானது தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் இவ்விருதினை பெற்றுள்ளது .
இதற்கான சான்றிதழை நேற்றுமுன்தினம் மாவட்ட செயலாளரினால் வழங்கப்பட்டது
( வி.ரி. சகாதேவராஜா)