மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு விளக்கமறியல்!

நிதி மோசடி சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தினம் அவரை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்லாந்தில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக உறுதியளித்து, 40 இலட்சம் ரூபா பணம் கேட்டு அதில் 30 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர்ர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.