ஐந்து முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
அவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.
இவர்கள் மீது பாரிய நிதி மோசடி, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வாபஸ் பெறப்பட்டு நீதிமன்றில் நிராகரிக்கப்பட்ட பல வழக்குகளை மீண்டும் விசாணைக்கு எடுக்க சட்ட திணைக்களம் தயாராகி வருகின்றது.
நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் குழு தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் மீண்டும் விசாரணை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.