இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையுடன் புத்தளம் மாவட்ட சர்வ மதக் குழுவின் ஏற்பாட்டில் புத்தளம் சாந்த மரியா தேவாலாயத்தின் வளாகத்தில் சனிக்கிழமை பகல் 2.00 மணியளவில் நத்தார் திரு விழா நடை பெற்றது.
இதில் சர்வ மதத் தலைவர்கள் கலந்து கொண்டு நத்தார் தொடர்பான கருத்துக்களை தெரிவித்ததுடன்
சாந்த மரியா அறநெறி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.
இதன் போது அறநெறி மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.