அட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று அட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அட்டன் பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கண்டி பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 21.12.2024 அன்று காலை 10 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 50 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பஸ் சாரதியின் கவனமின்மை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த பஸ்ஸில் 54 பேர் வரை பயணித்துள்ளதாகவும், இவ்விபத்தில் காயமடைந்த 50 பேர் வரை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.