மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக இலக்கிய விழா இன்று (18)இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக இலக்கிய விழா பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைஞர் கௌரவிப்பு, போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்குதல் என்பனவும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச கலைமன்றங்களின் பிரதிநிதிகள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.