இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள விசேட தேவையுள்ள மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு செயற்கை அவையங்கள் வழங்குவதற்கான அளவீடுகள் இன்று (13) திகதி மேற் கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் வேண்டுகொளுக்கு இனங்க சென்டர் போ ஹன்டிகப் நிறுவனத்தினால் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் விசேட தேவையுடைய நபர்களுக்கான அளவீடுகள் இடம் பெற்றது.
சென்டர் போ ஹன்டிகப் (Centre for Handicapped ) நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் அத்தநாயக்கவின் நெறிப்படுத்தலின் கீழ் மாவட்ட இணைப்பாளர் எஸ். ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இதன் போது 30 நபர்களுக்கான 31 செயற்கை கால் பொருத்துவதற்கு தேவையான அளவீடுகள் அவுஸ்திரேலியா அயிட் நிதி அனுசரனையில் மேற்கொள்ளப்பட்டது.
சுமார் இரண்டு மில்லியன் பெறுமதியிலான அவயங்கள் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.