தெமட்டகொடையை வசிப்பிடமாகவும், அறக்கியாளை கிராமத்தை பிறப்பிடமாகவும் கொண்ட மொஹமட் நஸார் மொஹமட் ரோஸன் (Whole island JP) மனித உரிமைகள் லங்கா அமைப்பின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் நேற்று முன்தினம் (10) செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
இவர், தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணியாற்றும் ஓர் அதிகாரியாவார். அத்துடன் வக்பு நியாய சபையின் பதில் செயலாளராகவும் கடமையாற்றுகிறார்.
சமூகப்பணி இளமானிப் விஷேட பட்டத்தை (Bachelor of Social Work (Hons) – BSW) தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (NISD) மூலம் பெற்ற ஒரு பட்டதாரியான இவர், தனது பாடசாலைக் கல்வியை கிரி/அறக்கியாளை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், கிரி/ கெகுணகொல்லை தேசிய பாடசாலையிலும் பெற்றவர்.
அல்ஹாஜ் எஸ்.எல்.எம்.நஸார், எம்.எஸ்.டீ.ஹைரியா தம்பதிகளின் மகனான எம்.என்.எம். ரோஸன், சமூக சேவைகளில் சிறு வயது முதல் ஆர்வம் காட்டிவரும் இளம் சமூக ஆர்வலருமாவார்.