சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.
நாங்கள் உண்மை மற்றும் நீதிக்காக தொடர்ந்தும் போராடுகிறோம், நாங்கள் கேட்பது இழப்பீடையோ மரண சான்றிதழையோ அல்ல முறையான நீதி விசாரனையே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். வேண்டாம் வேண்டாம் OMP வேண்டாம், மனித உரிமைகள் இல்லாத நேரத்தில் மனித உரிமைகள் தினம் எதற்கு ,சர்வதேச நீதி வேண்டும், வெள்ளைவானில் கடத்திய எங்கள் பிள்ளைகள் எங்கே ,வேலைக்கு சென்ற பாடசாலை சென்ற எங்கள் பிள்ளைகள் எங்கே போன்ற கோசங்களையும் இதன் போது எழுப்பினர்.
உங்கள் இரானுவத்தை நம்பி ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எப்படி காணாமல் போனார்கள்?? போன்ற கேள்வியையும் வாசகத்தில் உள்ளடக்கியிருந்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த சங்கத்தின் தலைவி செபஸ்டியன் தேவி கடந்த 15 வருட காலமாக ஏமாற்றப்பட்டு வருகிறோம் இந்த மனித உரிமைகள் தினம் எதற்கு இந்த அரசாங்கம் வருகையின் பின் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருகிறோம் ஏன் இதனை செய்கிறார்கள். சர்வதேச நீதிப் பொறி முறை தான் எமக்கு தேவை உள்நாட்டு பொறிமுறை என்பது வெறும் கண்துடைப்பு எனவே தீர்வினை பெற்றுத் தரும் வரைக்கும் எங்கள் போராட்டம் தொடரும். இந்த அரசாங்கம் அவர் சார்ந்த சமூகத்தையே பார்க்கிறார் தமிழ் மக்களுக்கான எந்தவித தீர்வும் இல்லை என்றார்.
இதில் சுமார் நூற்றுக்கும் அதிகமான காணாமல் போனவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.