மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு சித்தாண்டி அலைமகள் வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
அந்த வகையில் மாடிவேம்பு 2, சித்தாண்டி 1 ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
அமரத்துவமடைத்த திருமதி.சண்முகநாதன் புவனேஸ்வரி அவர்களின் நினைவாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் அவரது மகனின் நிதி உதவி மூலம் தலா ஒரு குடும்பத்திற்கு இரண்டு பாய் மற்றும் இரண்டு போர்வை விரிப்பு என்பன வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரர் தலைமையில் இடம் பெற்ற நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் கோறளைப்பற்று பிரதேச இணைப்பாளர் ந.குகதர்சன், பேரவையின் உறுப்பினர்களான க.ஸோபணன், பூ.கிரிதரன், எஸ்.டிலுஜன் மற்றும் கிராம அதிகாரிகள் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.