ஒரு ஆரோக்கியமான சமூகம் அந்த இழப்புக்குரிய குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து அவர்கள் அதிலிருந்து மீண்டு வரவும் ஏதும் பிழைகள் நிரூபிக்கப்பட்டிருந்தால் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உதவ வேண்டும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் தங்கள் ஊடகச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
-அண்மையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தாய் சேய் மரணத்தை தொடர்ந்;து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார சேவைகள் பணியில் ஈடுபடுவோர் தங்கள் ஊடகச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது.
சனநாயக நாட்டில் அனைவருக்கும் போராடும் உரிமை உண்டு. ஆனால் எந்த போராட்டமும் அமைதியானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் ஏனையவர்களை துன்புறுத்தாததாகவும் இருக்க வேண்டும்.
அண்மையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தாய் சேய் மரணமானது சுகாதார அமைச்சினால் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு விடயம்.
அதை முழு மூச்சாக செய்ய மக்கள் போராடுவது அவர்களுது உரிமை. வைத்தியசாலை ஊழியர்கள் அந்த சோகத்தோடு அதிர்ச்சியில் இருந்தவேளை வைத்தியசாலையை சுற்றி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நடந்த அசௌரியமான சம்பவம் பின்வரும் கவலைக்கிடமான நிலைமைகளுக்கு வழிகோலியுள்ளது.
(வைத்தியசாலை பணிகளுக்கும் மருத்துவ கடமைகளுக்குமான இடையூறுகள்)
-பிரசவ அறையை சுற்றி நடந்தவை
ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பிரசவ அறைக்குள் நுழைந்து பிரசவித்தக் கொண்டிருந்த இன்னொரு தாயின் அந்தரக்கத்தையும் அவருக்குரிய சேவையையும் சீர்குலைத்தமை.
பிரசவத்திற்காக பிரசவ அறைக்கு வர இருந்த இன்னுமோர் தாயை இந்த கூட்டம் அவரை உள் அறையில் வைத்து பிரசவம் செய்ய ஏற்படுத்திய துர்பாக்கிய நிலைமை.
சத்திர சிகிச்சை முடித்தவிட்டு விடுதிக்கு கொண்டுவர இருந்த இன்னொரு தாயை விடுதிக்கு கொண்டு வந்து கவனிக்க விடாமல் இந்த குழுவால் அசம்பாவிதம் ஏற்பட்டது.
அன்றே இரட்டை குழந்தை பெற இருந்த இன்னொரு தாய் இந்த கலவரத்தைக் கண்டு பயந்து இவர்களால் விடுதி சூறையாடப்படலாம் எனப் பயந்து விடுதியை விட்டு அத்தியாவசியமான மருத்துவ கண்காணிப்பையும் மீறி வீடு செல்ல முற்பட்டமை.
சத்திர சிகிச்சை செய்ய சத்திர சிகிச்சை கூடத்திற்குள் சென்று கொண்டிருந்த வைத்தியரை வழி மறித்து தாக்க முற்பட்டமை
உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் அவசர சிகிசிக்சைக்காக வந்த கர்ப்பிணி தாயை பார்க்கச் சென்ற வைத்தியரை அச்சுறுத்தி அந்த தாயை ஆபத்துக்குள் தள்ளப்பட்டமை
(ஏ ஈ எனப்படும் அவசர சிகிச்சை பகுதியில்)
ஊலகத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் அல்லது யுத்தத்தின்போதும் மதிப்பளிக்கின்ற நோயாளர் காவு வண்டியை வழி மறித்து சேதப்படுத்த முயன்று மேலதிக சிகிச்சை பெற இருந்த நோயாளிகளை இன்னலுக்குள்ளாகியது.
அவசர மற்றும் உயிராபத்து நிலைமைகளுடன் கூடிய நோயாளர்கள் அவசர வைத்திய சிகிச்சையை நாட விடாமல் தடுத்தமை மூலம் சின்னம் சிறார்கள் உட்பட வேறு பல உயிர்களும் காவு கொள்ளப்படும் நிலமை தோன்றியிருக்கும்.
(வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பு கவலைக்கடமாகியமை)
மகற்பேற்று விடுதி தாதியர்கள் குடும்பநல உத்தியோகத்தர்கள் அவர்களின் பெயர்களைச் சொல்லி அழைக்கப்பட்டு வெளியே வாருங்கள் உங்களை கொல்லுவோம் என்று உயிராபத்து அச்சுறுத்தல் விடுத்தமை
அம்புலன்ஸ் உதவியாளர் ஒருவரை தாக்குவதற்கு துரத்தி கொண்டு ஓடியமை
பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை
கடமையிலிருந்த வைத்தியர்களை தாதியர்களை அடாத்தாக புகைப்படம் எடுத்து தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்தமை
கடமையில் இருந்த வெளிநோயாளர் பிரிவு வைத்தியரை கடமையில் இருக்க விடாமல் வெளியே துரத்தி பயமுறுத்தியமை
தொலைபேசி பரிவர்த்தனை நிலைய ஊழியர்களுக்கு அழைப்புகளை எடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியமை
வைத்தியசாலை கௌரவத்தை தனிப்பட்ட ரீதியில் தாக்க முற்படுவது
(மக்களின் விலைமதிப்பற்ற அரச உடமைகளை நாசம் செய்ய முற்பட்டமை)
பிரசவ அறையின் கண்ணாடியை உடைத்தமை
பல மில்லியம் ரூபா பெறுமதியான மொனிற்றர்களை தூக்கிபோட்டு உடைக்க முயன்றமை (இவை ஊழியர்களால் தடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது)
(அங்கீகரிக்கப்படாத அரசியல் தலையீடுகள்)
தன்னை ஒரு கட்சியின் உறுப்பினர் என அடையாளப்படுத்திய ஒருவர் வைத்திய ஊழியர்களை மிரட்டி அநாகரிகமான முறையில் வாக்குமூலங்களை கோரியிருந்தார்.
இன்னொரு அரசியல் கட்சி உறுப்பினர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விபத்துக்கள் மற்றும் அவசர Nவை பிரிவு விடுதி என்பவற்றில் மற்றைய நோயாளிகளின் ஊழியர்களின் கருத்தில் கொள்ளாமல் ஒளிப்பதிவுகளை எடுத்து சமூக வலைத்தலங்களில் வெளியிட்டிருந்தார். இவை மக்களை பிழையான வழியில் தூண்டுதலாக காணப்பட்டது
பிற அரசியல்வாதிகளும் உண்மை நிலவரங்களை ஆராய்ந்து மக்களை தெளிவுபடுத்தாமல் பிழையான வார்த்தை பிரயோகங்களுடன் மக்களின் உணர்ச்சி கொந்தளிப்பை தூண்டும் வகையில் பதிவுகள் இருக்கின்றமை
இவ்வாறான கவலைக்கிடமான சம்பவங்களின் விளைவுகளாக வைத்தியசாலையின் ஒட்டுமொத்த ஊழியர்களுமே மனமுடைந்து செயலற்று இருக்கின்றோம்.
நீங்கள் அறிந்தது போன்று வைத்திய சேவையை தரும் சேவையாளர்கள் சமப்பட்ட மன நிலையிருக்க வேண்டும். என்பது நியதி.
அவ்வாறு இல்லாவிட்டால் சேவை தளத்தில் உறுதி இருக்காது. தற்சமயம் மேற்கண்ட சம்பவங்களால் ஒரு வினைதிறனான சேவை அல்லது மேலும் தரத்தை மேம்படுத்த முடியாத மனச்சுமையான நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக தென் பகுதியில் இருந்து கடமைக்கு வரும் வைத்தியர்கள் தாதியர்கள் தங்களது பாதுகாப்பின்மையை உணர்கின்றார்கள்.
இந்த நிலை மாறி இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளை விடுத்து எங்களை நாங்களே ஆகவாசப்படுத்தி சேவையை தொடர மன்னார் மாவட்ட மக்களாகிய உங்களின் பங்களிப்பை எதிர்பார்த்தப்படி நம்பிக்கையுடன் இருக்கின்றோம்
தாய் சேய் இறப்புக்கான காரணங்கள் நடுநிலையாக ஆராயப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். அதற்குரிய முழு ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்கி கொண்டிருக்கின்றோம் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஈடுபட்டு வரும் சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள்; தங்கள் ஊடகச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
(வாஸ் கூஞ்ஞ)