ஜனாதிபதி தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் இன்று !

நடைபெற்று முடிந்த இலங்கையின் பத்தாவது நாடாளும்ன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றி பெற்ற நிலையில், புதிய அமைச்சர்கள் இன்றைய தினம் நியமனம் பெற இருக்கின்றனர்

நியமனங்கள் ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்கவுள்ளது.

பதவிப்பிரமாணம் செய்யவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர் . 23 அமைச்சரவை அமைச்சர்களும் 27பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பிரதமர் பதவியில் தொடர்ந்தும் ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் அந்த பதவியை வகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.