2023,2024ம் ஆண்டு க.பொ.த. உயர்தரத்தில் பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு முறையில் உயிரியல் விஞ்ஞான பிரிவுக்கு தெரிவான 34 மாணவிகளுக்கும், பிரயோக விஞ்ஞான பிரிவுக்கு தெரிவான 05 மாணவிகளுக்கும், உயிர் முறைமை தொழிநுட்ப பிரிவுக்கு தெரிவான 09 மாணவிகளும், கலைப் பிரிவுக்கு தெரிவான 54 மாணவிகளுக்கும், வர்த்தக பிரிவுக்கு தெரிவான 14 மாணவிகளுக்கும், 2023,2024ல் இம்முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 100 வலயங்களில் கல்முனை மமூத் தேசிய பாடசாலையானது இரண்டாம் இடத்தை பெறுவதற்கு ஏதுவாக இருந்த 9ஏ, எடுத்த 26 மாணவர்களுக்கும், 8ஏ எடுத்த 39 மாணவிகளுக்கும், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாகாண, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் பதக்கங்களும், சான்றிதழ்களும், பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் ஏ.பி.எப். நஸ்மியா அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சதுல் நஜீம் பிரதம அதிதியாகவும், இக்கல்லூரியின் முதல் வைத்தியர் திருமதி மர்சுக்குனா உவைஸ் கௌரவ அதியாகவும் கலந்து கொண்டனர்.
கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி யூ.எல். ரியால், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி, திருமதி அஸ்மா மலிக் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
கிழக்கிலங்கை முஸ்லிம் பெண்களின் கல்வி வரலாற்றில் ஒரு விடிவெள்ளியாக திகழும் கல்முனை மஃமூத் மகளிர் தேசிய கல்லூரி 54 ஆண்டுகாலமாக இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் விழிப்பையும் கல்வி எழுச்சியையும் ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கையில் பெயர் பெற்று விழங்கும் இக்கல்லூரிக்கு நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து முஸ்லிம் பெண் மாணவிகள் இக்கல்லூரியை நாடி வந்து கல்வி கற்று சர்வதேச ரீதியில் புகழ்பெற்று வருகின்றது.
இக்கல்லூரியானது 1971ல் ஆரம்பித்த போதிலும், கடந்த காலங்களை விட 2023ம் ஆண்டு காலப்பகுதியில் அதிகமான மாணவிகள் க.பொ.த. சாதாரணதரத்தில் அதிக சித்திகளை பெற்று வரலாற்று சாதனை பெற்றதுடன் உயர்தரம் கற்பதற்கு தெரிவாகியமையும் க.பொ.த. உயர்தரத்தில் கலை, வர்த்தக, கணித, விஞ்ஞான, தொழிநுட்ப துறைகளில் அதிகளவான உயர் சித்திகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்லவும் வாய்ப்புகள் கிடைத்துள்ளமையும் சிறப்பம்சமாகும்.
இதன் போது மமூதியத் எனும் சஞ்சிகையும் அதிதிகளினால் வெளியிடப்பட்டது. பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கின்ற பாடசாலை நிறைவேற்று அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், பிரதி, உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரிய ஆசியைகள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கல்விசார ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.