எதிர் வரும் 2024 பாராளுமன்ற தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (08) திகதி இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் நடை பெற்றது.
தேர்தல்களின் போது பாதுகாப்பு விடையங்கள் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது தெளிவூபடுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு தேர்தல் முறைப்பாடுகளுக்கான உதவி தெரிவத்தாட்சி அவலர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு