அம்பாரை மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவர்கள் அசைந்ததெல்லாம் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனின் கருத்திற்கே என கிழக்கு தமிழர் ஒன்றிய செயலாளரும் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளருமான வா.குணாளன் தெரிவித்தார்.
ஜக்கிய தமிழத்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயாலத்தினை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று மாலை (04) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஜக்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மாவட்ட செயலாளர் க.வசந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வேட்பாளர்களான சோ.புஸ்பராசா, சுப்ரமணியம் தவமணி, ஆகியோரும் கிழக்கு தமிழர் ஒன்றிய செயலாளரும் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளரும் வா.குணாளன் ஆலையடிவேம்பு பால் பண்ணையாளர்கள் சங்க தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் , வம்மியடிகுள மீன்பிடிசங்கத்தலைவர் ஆ.பேரின்பராசா உறுப்பினர்கள் உட்பட பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
வருகை தந்த வேட்பாளர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்;. இதன் பின்னராக வேட்பாளர்களும் மக்களும் இணைந்து அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் சுமந்திரன் என்ன சைகை காட்டுகிறாறோ அதற்கு தலை அசைப்பவர்களே இங்கிருக்கும் தமிழரசுக்கட்சிய்pன் தலைவர்களும்; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் என குற்றம் சுமத்தினார்.
இத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள கட்சிகளை ஒன்றிணைக்க பலர் பாடுபட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை. தமிழரசுகட்சி; சேர மறுத்துவிட்டனர். யாருடனும் இணைய மாட்டோம். தனித்தே நிற்போம் என்றனர். இது சமூகத்தின் மத்தியிலே தெளிவாக தெரியாது. தமிழரசுக்கட்சி சின்னத்தின் கீழ் நீங்கள் 10 வேட்பாளரும் நில்லுங்கள் என அழைத்தோம். அவர்கள் வரவில்லை என தவறான கருத்தொன்றை மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர். அது வெறும் பொய்;.
இறுதிநேரம் வரை எங்களோடு இணைவதாக கூறிவிட்டு வெறுப்பாக இருந்தவர்கள். அதற்கு காரணம் அவர்களது சுயநலம். அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் மீது அக்கறையின்மை.
ஆகவே அம்பாரை மாவட்ட மக்களின் தலைவிதியை தீர்மானிக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் அன்றி மக்களே எனவும் குறிப்பிட்டார்.