தென்மராட்சியின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு வடமராட்சி-வலிகாம மக்களும் உதவ வேண்டும்

தென்மராட்சிப் பிரதேசத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு வடமராட்சி மற்றும் வலிகாமம் மக்களும் உதவ வேண்டும் என யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற வேட்பாளர் ம.நடனதேவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

தென்மராட்சிப் பிரதேசம் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் அபிவிருத்தி அடையவில்லை.தென்மராட்சிப் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்று இம்முறை கட்டாயம் தேவை.

தென்மராட்சியின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு தென்மராட்சி மக்கள் மாத்திரமன்றி-வலிகாமம் மற்றும் வடமராட்சி மக்களுடைய ஒத்துழைப்பும் தேவையாக உள்ளது.
அவர்கள் தமது விருப்பு வாக்கினை தென்மராட்சியின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு வழங்குவார்கள் என நம்புகிறேன்.

கடந்த 1996ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது தென்மராட்சி மக்கள் வலிகாமம் மற்றும் வடமராட்சி மக்களை அரவணைத்திருந்தனர்.
அந்த விதத்தில் தென்மராட்சி மற்றும் வடமராட்சி-வலிகாம மக்களுக்கிடையே நல்லதொரு புரிந்துணர்வு உள்ளதென மேலும் அவர் மேலும் தெரியப்படுத்தியிருந்தார்.