மன்னாரில்; கண்டு பிடிக்கப்பட்ட இரு வௌ;வேறு மனித புதைகுழி வழக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது ஓரிரு கட்டளை பிறப்பிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ந் திகதி மீண்டும் விசாரனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்;பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இவ்வாறு தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரத்திலிருந்து மாந்தை பகுதிக்கு வீதியோரமாக குடிநீர் திட்டத்துக்கு தோண்டப்பட்டபோதும் 2018 ஆம் ஆண்டு மன்னார் நகரில் சதொச விற்பனை நிலையத்துக்கான கட்டிடம் அமைக்க முற்பட்டபோதும் இரு வௌ;வேறு மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த வழக்கு புதன்கிழமை (16) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக மனித புதைகுழி வழக்குகளில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
மன்னாரில் 2018 ஆம் கண்டு பிடிக்கப்பட்ட சதொச மனித புதைகுழி வழக்கு இம் மாதம் 7ந் திகதி தொடக்கம் 11ந் திகதி வரை வைத்திய கலாநிதி ராஜபக்ச குழுவினராலும் ராஜ்சோம தேவா குழுவினராலும் ஏற்கனவே இந்த மனித புதைகுழியிலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் பொதி செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள பொதிகளிலிருந்து மனித எச்சங்கள் பிறம்பாகவும் இதனுடன் இவ் புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட பிறப் பொருட்கள் கடந்த ஐந்து நாட்களும் பிரித்து எடக்கப்பட்டு பொதி செய்யப்பட்டன.
இந்த பிறப் பொருட்கள் ராஜ்சோமதேவா அவர்களாலும் மனித எச்சங்கள் ராஜபக்ச அவர்களாலுமே பிரித்து எடுக்கப்;பட்டு பொதி செய்யப்பட்டன.
அத்துடன் இந்நாட்களுக்குள் ராஜ்சோமதேவா அவர்களால் இந்த புதைகுழியை சுற்றியுள்ள பகுதிகளில் நான்கு இடங்களில் பரீட்சாத்திரமாக தோண்டிப் பார்க்கப்பட்டன. இந்த இடங்களில் தலா 110 . 130 சென்றி மீற்றர் கொண்டதாக தோண்டிப் பார்க்கப்பட்டன.
இத்தினங்களில் பொதிகள் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த பொதிகள் தொடர்பாக 16 ந்திகதி புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது இதில் அரச சட்டத்தரணி , காணாமல் போன உறவுகள் தொடர்பாக முன்னிலையாகி வரும் சட்டத்தரணிகள் , காணாமல்போன சம்பந்தப்பட்ட அலுவலக உத்தியோகத்தர்களும் ஆஜராகி இருந்தனர்.
இந்த வழக்கில் நீதிமன்றினால் சில கட்டளைகள் ஆக்கப்பட்டன. அதாவது வைத்திய கலாநிதி ஹேகவினால் பகுப்பாய்வு செய்யப்பட இருக்கும் மனித எச்சங்கள் இதில் இறப்புக்கான காரணம் . வயது எல்லை மற்றும் பால் தொடர்பான பகுப்பாய்வு செய்து அறிக்கை செய்வதற்கு போதிய இட வசதி காணாமல் இருப்பதால் நீதிமன்றத்தினால் கட்டளை ஒன்று ஆக்கும்படி கேட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று (16) கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதற்கான அறிக்கை ஒன்றை மன்றில் சமர்பிக்குமாறும் அத்துடன் ராஜசோமதேவா அவர்களும் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கால எல்லைகள் சம்பந்தமாகவும் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்று மன்று கேட்டுள்ளது.
அத்துடன் இந்த சதொச மனித புதைகுழியை மீண்டும் அகழ்வு செய்யப்பட வேண்டுமா அல்லது தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டுமா என இது தொடர்பான அபிப்பிராயங்களையும் பேராசிரியர் ராஜசோமதேவா அவர்களாலும் சட்டவைத்தியர் ராஜபக்ச அவர்களாலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ந் திகதிக்கு முன்னர் சமர்பிக்க வேண்டும் என்றும் மன்று கோரியுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ந் திகதி அழைக்கப்பட இருக்கின்றது அத்துடன் இதன் பொருட்கள் உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு கட்டளையாக்கப்பட்டுள்ளது.
(திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு)
2013 ஆம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி வழக்கும் புதன்கிழமை (16) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இவ் வழக்கில் வைத்திய கலாநிதி வைத்தியரத்தினா அவர்களும் குற்றத்தடுப்பு பாதுகாப்பு அதிகாரிகளும் காணாமல்போன உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகி வரும் சட்டத்தரணிகளும் அரச சட்டத்தரணியும் மன்றில் இவ்வழக்கில் முன்னிiலாயாகி இருந்தனர்.
இவ் மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்டு பின் பகுப்hய்வுக்காக பிரித்து பொதி செய்யப்பட்டிருக்கும் மனித எச்சங்கள் நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை சீ14 பரிசோதனைக்காக புளோரீடா அன்ரோபோலஜி நிறுவனத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை தொடர்பாக வைத்தியரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு நீதிமன்றினால் கட்டளை ஆக்கப்பட்டுள்ளது. வைத்திய கலாநிதி ஹேவேவினால் ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் அறிக்கைகள் இன்று (16) மன்றில் சமர்பிக்க இருந்தது.
ஆனால் இவர் நீதிமன்றில் இன்று (16) சமூகமளிக்காமையால் இந்த அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ந் திகதி தாக்கல் செய்யப்படுவதற்கு தவணை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பிரித்தெடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்பாகவும் எதிர்வரும் தவணையில் அறிவிக்கப்பட இருக்கிறது எனவும்
இந்த வழக்கும் நவம்பர் மாதம் 21ந் திகதி அழைக்கப்பட இருக்கின்றது என இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக மனித புதைகுழி வழக்குகளில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இவ்வாறு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
(வாஸ் கூஞ்ஞ)