_கட்சியை பாதுகாக்க கூடிய தலைமைத்துவம் றிசாத்திடம் இல்லை என புதிய ஜனநாயக முண்ணனியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் தெரிவிக்கையில்
கடந்த 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இருந்து நான் பாராளுமன்ற தேர்தலில் பங்கு கொள்கின்ற போது அதுக்கு முன்னர் 1988 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டபோது கடைசியாக நாம் பங்குகொண்ட 2020 ஆம் ஆண்டு தேர்தலிலும் முதல் தேர்தலில் 35,555 வாக்குகளை பெற்றேன்.
2014 ஆம் ஆண்டு 35700 வாக்குகளையும் இருபதாம் ஆண்டு தேர்தலில் 37ஆயிரம் வாக்குகளையும் தற்போது நடைபெற போகின்ற தேர்தலிலே என்னுடைய வாக்கு என்ற கேள்வியை முன் வைத்திருக்கின்றீர்கள் 88 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து 20 ஆம் ஆண்டு தேர்தல் வரை பல கட்சிகளில் என்னை பிரதிநிதித்துவம் படுத்தினாலும் எனது வாக்குகள் 35 ஆயிரம் வாக்குகளுக்கு குறையவில்லை என்பதை மாகாண சபை பாராளுமன்ற உறுதிப்படுத்தி இருக்கின்றன.
என்னோடு சேர்ந்து போட்டியிடுகின்றவர்கள் அந்தச் சின்னத்திலே விருப்பு வாக்குகளை பெறுகின்ற போது நாலாயிரம் ஐயாயிரம் விருப்பு வாக்குகளை அவர்களுக்கு தனித்து விழுந்தது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் எஸ்.தவ்பிக் இம்ரான் மஃரூப் போன்றவர்களுக்கு அது கிடைக்காது
நான் புதிய ஜனநாயக முன்னணியினுடைய தலைமை வேட்பாளராக சிலிண்டர் சிங்கத்தில் கேட்கின்றேன் எங்களுடைய கட்சி தினேஷ் குணவருத்தனவினுடைய மக்கள் கட்சி துமிந்த திசா நாயக்க போன்றவருடைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி தேசிய காங்கிரஸ் அத்தாவுள்ள பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஏனைய கட்சிகளுடைய கூட்டமைப்புதான் இந்த புதிய ஜனநாயக முன்னணி கட்சி. இதில் நான் ரணில் விக்ரமசிங்க அவருடைய கட்சியிலே வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.
30 வருட காலங்கள் அந்த கட்சியிலே பயணித்த பிறகு முஸ்லிம் தலைமையாக ஏற்றுக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸினுடைய வேட்பாளராக கடந்த 10 வருடங்களாக பயணித்த போது அதற்குரிய தகுதியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடைய தலைவர் இழந்து இருக்கின்ற போது ஒரு கட்சியும் ஒரு சமூகத்தை பாதுகாக்க கூடிய தகுதி அவரிடம் இல்லை என்பதை புரிந்து கொண்டவனாக இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விருப்பத்திற்குரியதை விட்டுவிட்டு மாறாக எடுக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ஷ 69 லட்சம் வாக்குகளையும் பாராளுமன்றத் தேர்தலில் 68 லட்சம் வாக்குகளையும் பெற்றார் குறைவாகப் பெற்ற சஜித் பிரேமதாசா அவருடைய கூட்டணி அவருடைய சேர்ந்த கட்சிகளும் என்ன பிரசாரம் செய்தார்கள் என்றால் தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் 55 லட்சம் பெற்றதாக கூறிவிட்டு மேலும் 25 லட்சத்தை பெறப்போகின்றோம் நாங்கள் 80 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை முன்னெடுப்போம் என்று கூறினர்.
அதன் அரைவாசை கூட எடுக்க முடியாதவர்கள் 42 லட்சம் வாக்குகளை பெற்று மூன்றாவது முறையும் தோல்வி அடைந்த சஜித் பிரேமதாச உடன் சிறுபான்மையினுடைய மனோ கணேசன் சஜித் பிரேமதாச உடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்றைய தலைவர் ரிஷாட்ம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரௌஃப் ஹக்கீமும் மீண்டும் இணைந்திருப்பது எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலே அவர்களுடைய உதவிகளை பெற்றார்களோ வாக்குறுதி மாறிய சஜித் பிரேமதாசா அவர்கள் மீண்டும் இணைந்திருக்கின்றார்கள் இதனை ஒவ்வொரு மாவட்டமும் நிராகரிக்கின்ற போது இரண்டு கட்சிகள் உடைய தலைமைத்துவம் பாராளுமன்றத்திற்கு வருவார்களா என்ற இந்த சந்தேகம் மக்களுக்கு உருவாகி இருக்கும் நிலையிலேயே மக்களிடமிருந்து 8,10 12 என்ற ஆசை வாக்குகளை கூறுகின்றார்கள்
இம்முறை பொதுத் தேர்தலில் இரண்டு தலைமைகளும் முழுமையாக நிராகரிக்கப்படுகின்ற போது
இந்த மாவட்டத்தில் போனஸ் ஆசனங்களுடன் இரண்டு ஆசனங்களை எனது தலைமையிலே புதிய ஐக்கிய முன்னணி பெறப்போகின்றது என்ற உண்மையை கூறுவது மட்டுமல்லாமல் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுடைய வாக்குகளை பெரும்பான்மையாக பெறக்கூடிய வாய்ப்பு எனக்கு இருக்கிறது என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்
—
Hasfar A Haleem BSW (Hons)