10தங்கப்பதங்கள் உட்பட்ட 29பதக்கங்களை வென்ற கொல்லநுலைப்பாடசாலை

கராத்தேப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் 10தங்கப்பதக்கங்களையும் 11வெள்ளிப்பதக்கங்களையும் 8வெண்கலப்பதக்கங்களையும் பெற்று சாதனைபடைத்துள்ளனர்.

ராம் கராத்தே சம்மேளனத்தினால் தேசிய ரீதியாக அக்கரைப்பற்றில் நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை இப்போட்டி இடம்பெற்றது.

இம்மாணவர்களை கராத்தே பயிற்றுவிப்பாளர் சென்சி.ஜே.சுதேஸ்கரன், உடற்கல்வி ஆசிரியர் பு.தயாரூபன் ஆகியோர் பயிற்றுவித்திருந்தனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள அதிகஸ்ட பிரதேச பாடசாலையாகவும், இதுவரை எவ்வித பொதுப்போக்குவரத்து வசதியில்லாத பாடசாலையாகவும் இப்பாடசாலை காணப்படுகின்ற அதேவேளை கராத்தே விளையாட்டிற்கான அடிப்படையான விளையாட்டுப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையிலும் குறித்த மாணவர்கள் இச்சாதனையை நிலை நாட்டியுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.

விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிக்குறைப்பாடுகளுடன் இப்பாடசாலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.