மட்டக்களப்பில் வீதியை குறுக்கெடுத்து செல்லும் யானைகள்

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு மண்டூர் பிரதான வீதியை குறுக்கெடுத்து 35 யானைகள் இன்று ( 22 ) சென்றன.

கடந்த வாரம் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் பல்வேறு அச்சுறுத்தலாக அமைந்த காட்டு யானைகள் இன்று ( 22 ) வெல்லாவெளி, மண்டூர் வயல்பகுதிகளில் சஞ்சரித்தன

இதனை அவதானித்த பிரதேச வாசிகள், வெல்லாவெளி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெல்லாவெளி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சுமார் 2.00 மணித்தியால பிரயேத்தனத்திற்கு பிறகு , காட்டு யானைகளின் கூட்டத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பினர்.இதனால் மட்டக்களப்பு மண்டூர் பிரதான வீதியின் போக்குவரத்துக்கு 1/2 மணி நேரம் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.