( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் பொது வைத்தியசாலையில் பாதிப்படைந்த ஒரு இளம் தாயின் குடும்பத்துக்காக நீதி கோருமுகமாக மன்னார் வைத்தியசாலைக்கு சென்றபோது வைத்தியர் அர்ச்சனா மீது இரு குற்றங்கள் சாட்டப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் பிணையில் விடுவிப்பு
கடந்த வெள்ளிக்கிழமை (02) இரவு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அநியாயமாக மரணித்த இளம் தாயின் சம்பவத்தை அறிந்து கொள்வதற்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.
அங்கு இவர் நடந்து கொண்ட விடயமாக மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகத்தால் மன்னார் பொலிசில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து மன்னார் பொலிசார் வைத்தியர் அர்ச்சுனா மீது இரு குற்றங்கள் சாட்டப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை (03) கைது செய்து மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன் முன்னிலைப் படுத்தியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து இவர் புதன் கிழமை (07) வரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதிபதியால் கட்டளை பிறப்பிக்கப் பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை (05) சிரேஷ்ட சட்டத்தரணி புனிதநாயகம் தலைமையில் வைத்தியர் அர்ச்சனாவின் விடுதலைக்காக மன்னார் நீதிமன்றில் நகர்த்தல் படிவம் சமர்பிக்கப்பட்டிருந்தது.
இதன்போது வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பல சட்டத்தரணிகள் ஆஜராகி பிணை மனுவை நிராகரிக்க வேண்டி இருந்தனர்.
இதனால் அன்று இந்த பிணை மனு நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
ஏற்கனவே குறிப்பிட்டதுக்கு இணங்க புதன் கிழமை (07) வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மன்னார் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது வைத்தியருக்கு சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி தலைமையில் முன்னைய விட மன்னார் . வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களிருந்த வருகை தந்திருந்த அதிகமான சட்டத்தரணிகள் வழக்கில் முன்னிலையாகி இருந்தனர்.
அதேநேரத்தில் இம்முறை வைத்தியரின் வழக்கில் இவருக்கு எதிராக கடந்த முறையை விட குறைவானவர்களே முன்லையாகி இருந்தனர்.
இந்த வழக்கில் வைத்தியர் அர்ச்சுனா அவர்களை ஐம்பராயிரம் ரூபா பெறுமதியான இருவரின் சரீரப் பிiணியில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கு எதிர்வரும் 21ந் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி புனிதநாயகம் தலைமையில் சட்ட்தரணிகள் அந்தோனி மடுத்தீன் , செ.டினேஷ் , கணேஷ் , வவுனியா சிரேஷ்ட சட்டத்தரணி லோயிஸ் குரூஸ் , த.வினோதன் . கமல்ராஜ் , போல் , திருமதி புராதினி . சுதர்சனா . சுலசினி , டிலெக்சி , கௌசலியா ஆகியோர் முன்னிலையாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றில் இவரின் விடுதலை வேண்டி பலர் இறை வேண்டுதல் கேட்டிருந்தடன் பலர் இவர் இன்று (07) பிணையில் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கையில் பெருந்தொகையான மக்கள் மன்னார் மற்றும் வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள் நீண்ட நேரம் மன்றுக்கு வெளியேயும் பஸ் நிலையங்களிலும் காத்திருந்து இவரை வரவேற்க காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும் நீதிமன்றுக்கு முன்னால் மக்கள் வெள்ளம் இவரை வரவேற்க காதத்pருந்தமையால் நீதிமன்றுக்கு முன்னால் குந்தகம் ஏற்படாதிருக்கும் நோக்குடன் பிணையில் விடுதலையான வைத்தியரை நீதிமன்று வளாகத்துக்கு முன்வாயிலால் அழைத்து வராது பின்வாயிலால் இவர் அவரின் சட்டத்தரணிகளால் அழைத்துச் செல்லப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தபோதும் இவர் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.