திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு.

(ஹஸ்பர் ஏ.எச்)  திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன்; நிரந்தர வீடுகள் நிர்மாணித்து அவை பயனாளிகளின் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வு  (06) மன்றத்தின் தலைவர் எம். ரீ. ஏம். பாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.
கடந்த யுத்தம் மற்றும் தற்போதைய பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு மிக நீண்டகாலம் நிரந்தர வீடுகள் இன்றி கஸ்டப்படும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின்; கீழ்; 25 வீடுகள் நிர்மாணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
பெல்ஜிய நாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனமான செலவிப் (SELAVIP) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆறு பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன. திருகோணமலை மாவட்டத்தில் விளாங்குளம், இலுப்பைக்குளம், சல்லி மற்றும் ஆத்திமோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு குறித்த வீடுகள் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை மக்கள் சேவை மன்றம் இதுவரைக்கும் ஏறத்தாழ 150 இற்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகள் வீடற்றவர்களுக்கு உள்ளுர்ட மற்றும் சர்வதேச தொண்டு திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் நிரந்தர வீடுகள் நிர்மாணித்து அவை பயகாளிகளின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று மன்றத்தின் தலைவர் எம். ரீ. ஏம். பாரிஸ் தலமையில் இடம்பெற்றது.
குடந்த யுத்தம் மற்றும் பொருளாதார ரீதியில் கஸ்டப்பட்டு மிக நீண்டகாலம் நிரந்தர வீடுகள் இன்றி கஸ்டப்படும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் 4ம் கட்டத்தில் 25 வீடுகள் நிர்மாணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கபட்டன.
பெல்ஜிய நாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனமான செலவிப் (SELAVIP) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக ஆறு பயனாளிகளுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன. திருகோணமலை மாவட்டத்தில் விளாங்குளம், இலுப்பைக்குளம், சல்லி மற்றும் ஆத்திமோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு குறித்த வீடுகள் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை மக்கள் சேவை மன்றம் இதுவரைக்கும் ஏறத்தாழ 150 இற்கும் மேற்பட்ட நிரந்தர வீடற்றவர்களுக்கு உள்ளுர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.