(ஹஸ்பர் ஏ.எச்) சுவாமி விபுலானந்தரின் 77 ஆவது நினைவு தினம் (30) திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விலாசபை ஆலோசகருமான , சண்முகம் குகதாசன், பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலை அதிபர்களாக கடமையாற்றிய முன்னாள் தற்போது கடமையில் உள்ள அதிபர்கள் 35க்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.