அகால மரணமடைந்த அருட்பணியாளர் ஜொனார்த்தன் அடிகளாரின் மரண சடங்கு ஒழுங்குகள்.

( வாஸ் கூஞ்ஞ) ஞாயிற்றுக்கிழமை (07) அகால மரணமடைந்த மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குருமட உதவி அதிபர் அருட்பணி கீ.ஜொனாத்தன் கூஞ்ஞ அவர்களின் மரண சடங்குகள் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் விடுத்திருக்கும் செய்தியில்

திங்கள் கிழமை (08) பிற்பகல் 1.30 மணிக்கு அமரர் அருட்பணியாளரின் பூதவுடல் மன்னார் பொது வைத்தியசாலையிலிருந்து மன்னார் ஆயர் இல்லத்திலுள்ள சிற்றாலயத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

அங்கு பிற்பகல் 7 மணிக்கு இவரின் ஆன்ம இளைப்பாற்றிற்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

பின் ஆயர் இல்லச் சிற்றாலயத்தில் செவ்வாய் கிழமை (09) காலை 7 மணிக்கு இவரின் ஆன்ம இளைப்பாற்றிற்கான இரங்கல் திருப்பலியும் இதைத் தொடர்ந்து காலை 7.45 மணிக்கு இவரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

காலை 8.15 மணியிலிருந்து பிற்பகல்  2.45 மணிவரை பொது மக்களின் அஞ்சலிக்காக அருட்பணியாளரின் பூதவுடல் வைக்கப்படும்.

இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் ஆண்டகையின் தலைமையில் கூட்டு இரங்கல் திருப்பலி அங்கு ஒப்புக் கொடுக்கப்படும்.

பிற்பகல் 5 மணிக்கு பேராலயத்திலிருந்து சேமக்காலைக்கு அன்னாரின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு 5.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என குருமுதல்வர்  தெரிவித்துள்ளார்.

(வாஸ் கூஞ்ஞ)