பாதிப்புறுவோருக்கு பொது அமைப்புக்களின் ஒள்றியம் அழைப்பு
(வாஸ் கூஞ்ஞ)
மன்னார் பிரதேச செயலகப் பிரிவில்; கனியமண் அகழ்வுக்காக காணிகள் அபகரிக்கப்படுகின்றன. போலியான உறுதிகளை முடித்துக் கொடுப்பதில் ஒருசில சட்டத்தரனிகளும் ஈடுபடுவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்துக்கு முறைபாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கனிய மண் அகழ்விற்காக நிலத்தை இழந்தவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். எனவும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர் வி.எஸ்.சிவகரன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் விடுத்துள்ள அறிக்கையில்;.
மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கனியமண் அகழ்விற்காக உள்ளோர் காணி முகவர்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் காணி அபகரிக்கப்படுவதாக பல்வேறு விதமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனவும்
இதில் சில குழுக்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும் அதிகாரத்தை உபயோகித்தும் சாதாரண மக்களின் காணிகளை அபகரித்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
அத்துடன் பயன்படுத்தப்படாத நிலங்களுக்கு ஆட்சி உறுதிகளையும் எழுதுவதாகவும் கூறுகின்றனர். அது மாத்திரமன்றி சில காணிகளுக்கு பயன்பாட்டில் இல்லாத வேறு உறுதிகளை எல்லைகளை மாற்றி குறித்த இடங்களில் நில அபகரிப்பிலும் ஈடுபடுகின்றனர். எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆதாரங்களோடு குற்றம் சாட்டுகின்றனர.;
இதில் இவ்வாறான முறைகேடான உறுதிப் பத்திர தயாரிப்புகளை சில சட்டத்தரணிகள் மேற்கொள்வதாகவும். பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர் எனவும்
இவ்வாறு அபகரிக்கப்படும் காணிகளை பல கோடி ரூபாய் பெறுமதிக்கு ஆவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்டு கனியமண் அகழ்வில் ஈடுபட உள்ள இலங்கை முகவர் நிறுவனங்களுக்கு விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆகவே சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த சட்டத்தரணிகள் சாமானிய மக்களின் இருப்பு உரிமையாகிய நிலத்தை இவ்வாறான மோசடி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவது என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் எனவும்
ஆகவே இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியதுடன் எங்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
இந்த மோசடி கும்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஆகவே நில அபகரிப்பாளர்களுக்கு அஞ்சாமல் முன்வருமாறு தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.