தமிழர்களின் பொருளாதார மகாநாட்டில் கிழக்கு ஆளுநர்

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன்  தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய  13வது  பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில்  டாவோஸ் (Switzerland Davos) நகரில்  இன்று ஆரம்பமாகியுள்ளது.

இம்மகாநாட்டில் கலந்து கொள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்தொண்டமான் தனதுபாரியார் சகிதம் இன்று சூரிச்விமானநிலையத்தை வந்தடைந்தார்.

அவரை The Rise Switzerland குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும்  மகாநாட்டில் கலந்துகொள்ள இன்று சுவிஸ் நாட்டை வந்தடைந்துள்ளார்.

உலகப்பொருளாதார மகாநாடு நடைபெறும் Davos   மண்டபத்தில்   இம் மகாநாடு இன்று தொடக்கம் 9ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

உலகத்தின் நாலா பக்கங்களிலிருந்தும் 32ற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து 500ற்கு மேற்பட்ட   தொழில் முனைவோர்,  தொழில் லல்லுனர்கள் இம் மகாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

உலகலாவிய The RISE  நிறுவனத்தின் சுவிஸ்நாட்டிற்கான ஒருங்கினைப்பாளரும் தலைவருமான கலாநிதி சிறி இராசமாணிக்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சுவிஸ்நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள்,  மசடோனியா நாடடின் ஜனாதிபதி,  அல்பானிய பிரதமர்,  கொசோவோ நாட்டின் பிரதமர்  உட்பட தமிழக அரசின் அமைச்சர்கள்  உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.