திருகோணமலையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்_
மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை  31ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது. இதில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.