The RISE Davos மாநாடு  தமிழர்களைப் பொறுத்தவரை மாபெரும் வரலாறு.ம. ஜெகத் கஸ்பர் அடிகளார்

The RISE Davos மாநாடு  தமிழர்களைப் பொறுத்தவரை மாபெரும் வரலாறு.இது நமது காலம்; தமிழர் தலைநிமிர் காலம்!21-ம் நூற்றாண்டு எல்லோருக்குமானதாய் இருக்க வேண்டும், எளியவர்களுக்கும் இடம் வேண்டும் என ஆசிக்கிறோம் என எழுமின்(The RISE)  அமைப்பின் நிறுவனர் தமிழ்ப்பணி ம. ஜெகத் கஸ்பர் அடிகளார் தெரிவித்துள்ளார்.

Davos மாநாட்டு நிகழ்ச்சி விபரங்களை வெளிப்படுத்தி   வெளியிட்டுள்ளஅறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

இம் மாநாட்டில் என்ன சாதிக்கப்போகிறோம் என்ற கேள்விக்கு அப்பால் உலகின் வல்லமை மிக்க தலைவர்களும் நிறுவனங்களும் ஆண்டுதோறும் ஒன்றுகூடி வருகிற அந்த Davos அரங்கிற்கு நாங்களும் தமிழர்களாக வந்து நிற்கிறோம் என்பதே எம்மைப் பொறுத்தவரை அசாத்திய சாதனைதான். நாங்கள் எளியவர்கள். ஆனால் தமிழ் மொழி – தமிழ் இனப் பற்றில் மிகப் பெரியவர்கள். அதில் எமக்கு இறுமாப்பும் பெருமிதமும் உண்டு. அதனாலேயே எங்களுக்கு ஏராளம் சவால்கள், இடர்கள். ஆனால் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நாங்கள் உண்மையாக இருக்கும்வரை வரலாறு எங்களைக் கைவிடாது. இந்த உறுதியான நம்பிக்கையுடன் Davos மாநாட்டு நிகழ்ச்சி விபரங்களை மகிழ்ச்சியுடன் உங்களோடு  மூலம் பகிர்ந்துகொள்கிறேன். எல்லோரிடமும் ஆசி வேண்டுகிறோம். குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டக் கேட்கிறோம். விரும்புகிறவர்கள் எம்முடன் இத் தமிழ்ப் பயணத்தில் இணைந்திட அழைக்கிறோம். இது நமது காலம்; தமிழர் தலைநிமிர் காலம்! என தெரிவித்துள்ளார்