அவுஸ்திரேலியாவில் இருந்து ஓந்தாச்சிமட மாணவர்களுக்கு பாரிய உதவி!

( வி.ரி. சகாதேவராஜா)
அவுஸ்திரேலியாவில் வாழும் ஓந்தாச்சிமடம் பழைய மாணவர்களால் ஓந்தாச்சிமடம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் பயிலும் சகல மாணவர்களுக்கும்  பெறுமதியான கற்றல் உபகரணங்கள்  (17) வெள்ளிக்கிழமை  வழங்கப்பட்டன.

 பாடசாலை அதிபர் திருமதி மதிவதனி பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதிகளாக பட்டிருப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரி.துவிதரன் சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா   ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நன்கொடை அதிதியாக நன்கொடையாளர் சார்பாக  அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த  பிரபல சமூக சேவையாளர் பழைய மாணவர் ரி.சௌந்தரராஜன் திருமதி றோஜினி சௌந்தரராஜன் கலந்து சிறப்பித்தனர்.
கௌரவ அதிதிகளாக  பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர் திருமதி அ.சற்குணராஜா, மற்றும் ஆசிரியர் முத்தையா ஜெயாதி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
உதவி வழங்கிய அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு இடம்பெற்றது.
 சாதனை படைத்த  மாணவர்களுக்கு விசேட பரிசுப்பொதிகள்  வழங்கப்பட்டன.
 அவுஸ்திரேலியாவிலிருந்து வயிரமுத்து அழகையா ,
முத்தையா மாறன் ,
கோபாலபிள்ளை ஜனபாலசந்திரன் ,
தெய்வநாயகம் சௌந்தரராசன்,
கோபாலன் ரவீந்திரன் ,
நடராசமணி கனகராஜ் ,
செல்வராசா சுதர்சன் ,
யோகலிங்கம் உமாகாந்தன் ,
கிருபைராசா அமரதாஸ்,
அருணாசலம் இன்பநாதன் ஆகிய பத்து பழைய மாணவர்கள் இந்த பாரிய கல்வி ஊக்குவிப்பு உதவித் திட்டத்திற்கு ஒன்பது லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.