(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் (காணி) தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) இடம் பெற்றது.
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் இரண்டாம் மொழி பயிற்சி நெறி நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன.இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் சிங்கள மொழியை கற்று தேர்ச்சி பெற்று சிறந்த தொடர்பாலை மேற்கொண்டு சேவையை வழங்க வேண்டும் என்றார்.
உத்தியோகத்தர்களின் இரண்டாம் மொழியாற்றலை அதிகரிப்பதுடன் அலுவலக கடமையில் ஈடுபடும் போது தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக் கற்கை நெறி அமையவுள்ளது.
150 மணித்தியாலங்களைக் உள்ளடக்கிய இக்கற்கை நெறியை அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஆர்வமாக கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இவ் கற்கை அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வளவாளராக கே.மதிசூதனன் மேற்கொண்டார்.
இந்த நிகழ்விற்கு மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே. மதிவண்ணன், அரச கரும மொழிகள் திணைக்கள இரண்டாம்மொழி கற்கையின் இணைப்பாளர் என்.விஜயதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.