(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வாகரையில் நில அபகரிப்பை தடுப்போம் நிலத்தை காப்போம் என்ற தொனிப் பொருளில் இராஜங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் தலைமையில்பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் மாபெரும் கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலம் இன்று வியாழக்கிழமை (2) வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து பிரதேச செயலகம் வரையில் இடம்பெற்றது.
முற்போக்கு தமிழர் கழக கட்சி மற்றும் வாகரை பொது அமைப்புக்கள் ஒன்று இணைந்து வாகரையில் நில அபகரிப்பை இல்மனைற் அகழ்வு போன்றவற்றை நிறுத்த கோரி ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் தலைமையில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்ட நிலையில் அங்கு பொலிசார் குவிக்;கப்பட்டு பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்
அதனை தொடர்ந்து அங்கு ஒன்றினைந்த மக்கள் நில அபகரிப்பை நிறுத்து, இல்மனைற் அகழ்வை நிறுத்து, இறால் பண்ணை அமைப்பை நிறுத்து. போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஆர்பாட்ட ஊர்வலமாக சுமார் 2 கிலோ மீற்றர் துரம் கொண்ட பிரதேச செயலகம் வரை சென்று அங்கு கோஷங்கள் எழுப்பிய பின்னர் உதவி பிரதேச செயலாளரிடம் இராஜாங்க அமைச்சர் மகஜர் ஒன்றை கையளித்த பின்;னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.