கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகத்திற்கு பிரியா விடை நிகழ்வு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகம் கே. திருவருள் அவர்களுக்கு பதிவாளர் உத்தியோகத்தர்களினால் பிரியாவிடை நிகழ்வு மாவட்ட  செயலகத்தில் இன்று (22) திகதி இடம் பெற்றது.

பதிவாளர் திணைக்களத்தினால்  வருடங்கள் கடமை புரிந்து ஓய்வு பெற்று செய்கின்றார்.

உதவி பதிவாளர் நாயகம், பிரதி பதிவாளர் நாயகமாக கடமை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது பதிவாளர் பிரிவு உத்தியோகத்தர்களினால் நன்றி நகிழ்தல் நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதி பதிவாளர் நாயகம் இங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்கள் பதிவாளர் பரீட்சையில் சித்தி பெற முயற்சி செய்ய வேண்டும் என இதன் போது உத்தியோகத்தர்களிடம் கொரிக்கை விடுத்தார்.

திணைக்கள உத்தியோகத்தர்கள் மத்தியில்  சிறந்த நிர்வாகியாகவும் சிறந்த ஆளுமை உடையவராக தனது கடமைகளை செவ்வனே செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில்  மேலதிக பதிவாளர்கள் பதிவாளர் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்