(சுமன்)தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நான்காம் கிராமம் கமு/சது வேம்படி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மாணவர்களின் கல்வி நிலையை ஊக்குவிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினரால் அப்பியாசக் கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.