கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் நிகழ்வு – 2024

கரையோர பாதுகாப்பு  மற்றும் தூய்மைப்படுத்தும் நோக்குடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வானது இன்றைய தினம் (2024.02.15) மாங்காடு கிராம சேவகர் பிரிவில்  பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் இடம்பெற்றது.

இந் நிகழ்ச்சித்திட்டமானது  கிழக்கு மாகாண கெளரவ ஆளுனர் அவர்களின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் கிழக்கு கரையோரங்களை தூய்மையாக பேணுதல் எனும் திட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதேச மக்களுடன் இணைந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,  கடல் சார் சூழல் அதிகார சபை மற்றும்  பிரதேச சபை உத்தியோகத்தர்களின்  பங்குபற்றுதலுடன் கரையோரங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

மேலும் இந் நிகழ்வினை பிரதேச செயலக கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு யோ. நிசந்தராசன் மற்றும் திரு ஆ. ஜெகரூபன் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.