மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வீதிகளுக்கான பெயர்பலகை நடல் மற்றும் தைப்பொங்கல் விழா என்பன ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது. சக்தி இளைஞர் கழகத்தின் தலைவர் செல்வன் ந.அனுஜன் தலைமையில் இடம்பெற்ற 30 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் வீதிகளுக்கான பெயர்பலகை அமைத்து திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் பாரம்பரிய முறைப்படி தைப் பொங்கல் விழாவும் சிறப்பாக இடம்பெற்றது.
விழா அதிதிகள் கிராமிய நடன அணிவகுத்தல் மற்றும் பெரியார்கள் வேடம் தரித்த சிறுவர்களின் அணிவகுத்தலுடன் வரவேற்கப்பட்டு வீதிகளுக்கான பெயர்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் பொங்கல் பானையும் ஏற்றிவைக்கப்பட்டது. இதன்போது மகிழூர்முனை சிறி மண்டபத்தடி வலம்புரி விநாயகர் அறநெறி பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வும் இளைஞர் கழக உறுப்பினர்களின் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான சமூக சீர்திருத்த நாடகம் என்பனவும் இடம்பெற்றது. தொடர்ந்து கலை நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ஈசான சிவாச்சாரியார்.க.கு.மோகாணந்தம் அவர்கள் கலந்துகொண்டதுடன்
மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி த.சபியதாஸ், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.புவிநாதன் , கிராம சேவை உத்தியோகத்தர் ச.தேவதாஸ் ,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி உதயகுமாரி ஜெயக்குமாரன், மற்றும் மாவட்ட சம்மேளன தலைவர், பிரதேச சம்மேளன தலைவர், கிராம மட்ட அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் ஊர் மக்கள் ஒன்றுகூடி நடாத்திய பெருவிழாவாக அமைந்தது குறிப்பிடத்தக்கது