மன்னார் தீவையும் மக்களையும் காப்பாற்றுங்கள். மக்கள் சார்பாக பிரஜைகள் குழு ஜனாதிபதிக்கு மகஜர்.

(வாஸ் கூஞ்ஞ) 

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் பாரிய களியமண் அகழ்வு மற்றும் உயர்மின்வலு காற்றாடிகள் அமைக்கும் திட்டங்களினாலும் மன்னார் மக்களின் குறிப்பாக மன்னார் தீவு மக்களின் இருப்பு , வாழ்வாதாரம்  அழிவு , சட்டவிரோத காணி அபகரிப்பு . வாழ்வு தரும் மரங்கள்  அழிப்பு போன்றவற்றால் மன்னார் தீவை கடலுக்குள் அமிழ போவதையும்

மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகள் ஆகியவற்றில் இருந்து மன்னாரின் சுற்று சூழலை அழிப்பதுமான திட்டத்தை உடன் கைவிட்டு மக்கள் நலமாகவும் மகிழ்வுடன் வாழவும் நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி மன்னார் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு மன்னார் மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்ட மகஜரில்

மன்னார் தீவின் குடிமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பின்வரும் விடயங்களை மன்னார் குடிமக்கள் சார்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாகிய நாங்கள் தங்களின் கவனத்திற்கு கொன்டுவருகின்றோம். இவ் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம.;

மன்னார் மாவட்டத்தில் அரச படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் மீள மக்களிடம் கையளிப்பதோடு பொதுவான காணிகளும் விடுவிக்கப்படல் வேண்டும்.

அத்தோடு அவர்களின் அமைதியான வாழ்விற்கு வழிவகுத்தல். பல அரச காணிகள் தவறான செயற்பாடுகளினால் மக்களின் வளர்ச்சியினை பாதிக்க கூடியதாக ஒருசிலர் தமதாக்கியுள்ளனர்.

வேறு மாவட்ட அரசியல் வாதிகள் மற்றும் அரசியல் முகவர்கள் மன்னாரில் உள்ள மக்களினதும் பொதுக்காணிகளையும் வாங்கி தமதாக்கிக் கொள்கின்றனர். இதனால் வருங்காலத்தில் மக்களுக்கும் அவர்களுடைய சந்ததியினருக்கும் ஏற்படவிருக்கும் அபாயம் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்

அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய காணிகள் அபகரிக்கப்பட்டு சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படுவதனால் இதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கப்படல் வேண்டும்.

மற்றும் மன்னார் மாவட்ட காணிகள் சரியான முறையில் அளவீடுகள் செய்யப்படாமை அத்துடன் இன்றுவரை முழுமையான வரைபடம் இன்மை. குறிப்பாக (குளங்கள் மேச்சல் நிலம் கட்டுகரைகுளத்திற்கு சேர்ந்த பகுதி) காற்றாலை. மண்அகழ்வு போன்ற பாரிய திட்டத்தால் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வளங்கள் சுரண்டப்படுகின்றன.

இதற்காக மன்னார் பட்டினம் பிரதேச செயலகம் நில அளவீடுகளை செய்கின்றது. அரச அதிகாரிகளினால் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றது. உயர் மிண் காற்றாலைக்காக. 4. கிலோ மீற்றர் அகலமும் 36 கிலோ மீற்றர் நீளமும் கொண்ட (4816 சதுர கிலோ மீற்றர்.) மன்னார் தீவினுள் அரச மற்றும் தனிப்பட்ட முகவர்களால் 4500 க்குமேல் துளைகள் 50 அடிக்கு கீழ் இடப்பட்டு கனியமண் அகழ்வு இதுவரை செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதில் எடுக்கப்பட்ட மண்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் மன்னார் தீவினுள் அனைத்து பிரதேசங்களிலும் கனியமண் அகழ்வு பரிசேதனை செய்யப்பட்டுள்ளது.

கணியமண் அகழ்வினால் நிலமேற்ப்பரப்பு மிகவும் இறுகமற்று (அய்தாகி) போகின்றது. தொடர் நடவடிக்கைக்காக இக்கனிய மண்ணை ஆய்வு செய்ய அவுஸ்திரேலியாவிலுள்ள தனிப்பட்ட கம்பனிகளுக்கு இம்மண்ணை விற்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது மன்னார் தீவின் 63 சதவீத நிலப்பரப்புகள் கடல் மட்டத்தின் கீழ் உள்ளது. இக்கனிய மண் அகழ்வு தொடருமானால் தற்போது நடைமுறையிலுள்ள கால நிலை காரணமாக மன்னார் தீவு முற்று முழுதாக நீரில் மூழ்கும் அபாய நிலை காணப்படுவதால் இக்கனிய மண் அகழ்வு உடன் தடைசெய்யப்படல் வேண்டும்.

இந்நடவடிக்கையினால் மன்னார் தீவினுள் உள்ள இயற்கை குடிநீர் முற்றாக பாதிக்கப்படுவதுடன் மன்னார் தீவினுள் காணப்படும் பனை  தென்னை போன்ற பயன்தரும் மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டு சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும்.

இதனால் மக்கள் தீவினுள் வாழ முடியாத நிலை ஏற்படும். எனவே இச் செயற்பாட்டை உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

தவறும் பட்சத்தில் மக்களின் எமுச்சியினையும் போராட்டத்தையும் தடுக்கமுடியாது போய்விடும்.

உயர் மின்வலுக் காற்றாலை செயற்திட்ட நடவடிக்கை மன்னார் தீவினுள் இதுவரை 36 இற்கு மேற்பட்ட உயர் மின் வலுக்காற்றாடிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்தும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் 100 இற்கும் மேற்பட்ட உயர்மின்வலுக் காற்றாடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மன்னார் தீவை உயர் மின்வலுக் காற்றாடிகளின் பண்ணையாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு மின்வலுக் காற்றாடிக்கு 6..5 ஏக்கர் நிலப்பரப்பை சுவீகரிக்கவும் விசேட சட்ட மூலம் இந் நிலங்களை அரசுடமையாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்நிலங்கள் சுவீகரிக்கப்படுவதனால் மன்னார் தீவினுள் வசிக்கும் மக்களின் இருப்பு நிலம் கேள்விக் குறியாகிவிடும். அத்தோடு மக்கள் பலவந்தமாக இடம்பெயர்வு செய்யப்படும் நிலை உருவாகலாம்.

30 வருடங்களுக்கு மேலாக இம்மக்கள் போரினால் பாதிக்கப்பட்டு யாவற்றையும் இழந்து சீவிப்பதற்கு கஷஸ்டப்படும் நிலையில் இச்செயற் திட்டங்கள் நடை பெறுமானால் இவர்களுடைய வாழ்வாதாரம் பாதிப்பு நிலை ஏற்பட்டு இம்மக்கள் மன்னார் தீவை விட்டு வெளியேறும் ஒரு துர்பாய்க்கிய நிலை ஏற்படும்.

எனவே இதை நிறுத்தி மன்னார் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.
உயர் மின்வலு காற்றாலை இதனால் ஏற்படும் சில பிரச்சனைகளாக
மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படுவதனால் ஓரு சுதந்திரமற்ற அடிமைத்தன வாழ்விற்கு மக்கள் செல்லப்படுகின்றார்கள்.
கடக்கரையோர கண்டல்தாவரங்கள் ஏனைய தாவரங்கள் நீர் ஓடைகள் அழிக்கப்படுகின்றது.
சுத்தமான பாதுகாப்பான நிலகீழ் நீர் அசுத்தம் அடைகின்றது.
இயற்கையாக அமைந்திருந்த பாதுகாப்பான நில அமைப்புக்கள் அழிக்கப்படுவதால் கடற்கரையில் மண்ணரிப்பு ஏற்படுகின்றது.
வளமுள்ள பல தாவரங்கள் அழிக்கப்படுகின்றது. அத்துடன்வெள்ளபெருக்கு ஏற்படுகின்றது.
கால்நடை மேச்சல் நிலங்கள் இல்லாமல் போகின்றது.
மக்களின் நாளாந்த வாழ்வாதார உழைப்பு முயற்ச்சிகள் அழிக்கப்படுகின்றது. பனைவளங்கள் மற்றும் நாவல் மரம் வேம்பு உடைமரங்கள் பாலை மரங்கள் அழிக்கப்படுகின்றது.

மக்களின் நலவாழ்வு மிகவும் பாதிக்கப்படுவதுடன் அழிக்கப்படுகின்றது. கற்பினி தாய்மார்களின் பாதிப்பு முதியோர் வாழ்வு பாதிப்பு காற்றாலையினால் ஏற்படும் வேன்டாத சத்தங்கள் சிறுவர்களின் கல்வி பாதித்தல் தூக்கமற்ற இரவுகளை மக்கள் அனுபவிக்கின்றனர்

மீனவர்கள் பிரச்சனைகள் தொடர்பாக
மன்னார் மாவட்டத்தின் கூடிய நிலப்பரப்பு கடலுக்கு அண்மையில் காணப்படுவதனால் முள்ளிக்குளம் தொடக்கம் மன்னார் தீவு உட்பட தேவன்பிட்டி வரை அநேக மீனவ கிராமங்கள் காணப்படுகின்றது.

இவர்களின் அடிப்படை வாழ்வாதாரமாக மீன்பிடித்தொழில் காணப்படுகின்றது. முன் குறிப்பிட்ட செயற் திட்டங்களின் மூலமும் 30 வருட கால போரினாலும் அநேகமான மீன்பிடிக் குடும்பங்கள் தொழில் செய்ய முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகி தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாது கஸ்டப்படுகின்றார்கள்.

அத்துடன் தற்போதைய எரிபொருள் வழங்களின் பற்றாக்குறை காரணமாகவும் மேற்குறிப்பிட்ட செயற்திட்டங்களின் காரணமாக
தங்கள் வாழ்வாhரத்தை இழந்;து மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு மீனவர்கள் பாதிக்கப்படும் சில தவறான திட்டங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற வாய்ப்பாக ஏற்படுகின்றது.

நடைமுறைப்படுத்தப்பட்டடுள்ள உயர் காற்றாடிகள் மற்றும் ஏனைய திட்டங்களினால் மீன்பிடியின் அளவுகள் குறைகின்றது.

உத்தேசிக்கப்பட்டுள்ள மனிதகுலத்திற்கு பயங்கர ஆபத்தினை கொண்டு வரக்கூடிய கனிய மண்அகழ்வு திட்டமானது மற்றும் மீணவ குடும்பங்களின் இருப்பினையும் தொழிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்திய மீணவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள். அரச அதிகாரிகளின் நீதியற்ற நேர்மையற்ற செயற்பாடுகள். மீனவர்களை மேலும் பாதிப்படையச் செய்கின்றது.

தற்போதைய நாட்டின் நிலமையில் போதைப்பொருள் பாவனை மிகவும் உயர்வான மட்டத்தில் காணப்படுகின்றது.

இதில் முக்கியமாக இளையோர் மட்டத்தில் இப்போதைப் பொருள் பாவனை காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் இப்போதைப் பொருட்கள் நாளாந்தம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவiடிக்கைகள் மிகவும் இறுக்கமாக காணப்பட்டாலும் போதைப்பொருள் கடத்தல் சர்வ சாதாரணமாக காணப்படுகின்றது.

இதனால் தற்போது பாடசாலை மட்டத்திலிருந்து இப்போதைப் பொருள் பாவனை அதிகரிக்கும் எமது மாவட்டத்தை சுற்றி இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகாக கடற்படை தரைப்படை பொலிஸ்படை காணப்பட்டாலும் போதைப்பொருள் விற்பனை சாதாரணமாக காணப்படுகின்றது.

எனவே இப் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்யுமாறும் கேட்டு;க்கொள்வதோடு இதனால் கல்வி மற்றும் கலாச்சார சீரழிவுகளும் ஏற்படுகின்றது என்பதை சுட்டிகாட்டுகின்றோம்.

தற்போது மன்னாரில் அபிவிருத்தி என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் இலங்கையின் வரைபடத்தில் இருந்து மன்னார் தீவை முற்றாக அழிப்பதை நோக்கி நகர்கின்றது.

எனவே மன்னார் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை தயவு கூர்ந்து கவனித்து எங்களின் நிலம் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றோம். என இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.