வெள்ளப்பாதிப்பு மக்களுக்கு இன்று ஒஸ்காரின் உலருணவு

( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு பிரதேசத்தில் மிகவும் தாழ்நிலை பகுதியான பிரிவு 11 இல்  வசிக்கும்  வெள்ளப்பாதிப்பு மக்களுக்கு  ஒஸ்கார் அமைப்பு (அவுஸ்திரேலியா – காரைதீவு மக்கள் ஒன்றியம்- AusKar) இன்று(20) சனிக்கிழமை  300 தொகுதி  உலருணவுப் பொதிகளை  வழங்கி வைத்தது.

காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் முன்னிலையில் இப் பொதிகள் இன்று வழங்கப்பட்டன.
 ஒஸ்கார் சார்பில் சமூக செயற்பாட்டாளர் கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா கலந்துகொண்டு அதனை வழங்கி வைத்தார்.
அவுஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு சமூக ஆர்வலர்களின் நிதி உதவியைக்கொண்டு காரைதீவு இளைஞர்கள் அந்த மனிதாபிமான பணியில் ஈடுபட்டார்கள்.
கடந்த வாரம் வெள்ளத்தில் தத்தளித்த குளவெளி மக்களுக்கு சமைத்த உணவை ஒஸ்கார் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
 வெள்ள அகதிகளுக்கு உலருணவை தொடர்ந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது என்று ஒஸ்கார் கூறுகிறது.