மட்டக்களப்பு மக்களை மகிழ்வித்த கவிப்பேரரசு வைரமுத்து

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள கோட்டைக்கல்லாறு என்கிற ஊரில் இயங்கும் நூலகத்துக்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான் எழுதிய ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
கவிப்பேரரசை அவர்தம் இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ செந்தில் தொண்டமான் ,  மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வசிக்கும் சமுக சேவையாளர் கலாநிதி கல்லாறு சதீஸ்  இருவரும் இணைந்து  சந்தித்த வேளை  கோட்டைக்கல்லாறு நூலகத்துக்கான புத்தகங்களின் தேவையைக் கவிப்பேரரசுக்கு எடுத்துக் கூறியதையடுத்தே குறிப்பிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது..

ஆளுநர்  குறிப்பிட்ட நூல்களை கிழக்கு மாகாணத்துக்கு எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
இறுதியாகக் கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட மகாகவிதை உட்படக் கவிப்பேரரசு 39 நூல்களைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பிட்ட நிகழ்வில் வசந்தபவான் அதிபர் ரவி அவர்களும் கலந்து கொண்டார்.