இடமாற்றம் பெற்றுச் செல்லும் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் சதிசேகரனுக்கு பிரியாவிடை வைபவம்.

( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக  பணிபுரிந்த கந்தவனம் சதிசேகரன்  01.01.2024ஆம் திகதி திங்கட்கிழமை முதல் லாகுகல பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் பெற்று செல்கிறார்.
இடமாற்றலாகும் காரைதீவைச் சேர்ந்த கந்தவனம் சதிசேகரனுக்கான பிரியாவிடை நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அவரது இடத்திற்கு உதவி பிரதேச செயலாளராக பெரிய நீலாவணையைச் சேர்ந்த திருமதி சீனிவாசகம் நிருபா நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரியாவிடை நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
 மேலும் பிரதேச செயலக ஒவ்வொரு பிரிவின் உத்தியோகத்தர்களும் அவர் ஆற்றிய சேவைகள் பற்றி வாழ்த்து உரை நிகழ்த்தினர்..
திருக்கோவில் பிரதேசத்தில் ஐந்து வருட காலமாக அரும் சேவையாற்றிய சதிசேகரனுக்கு நினைவுச்சின்னம் வாழ்த்து மடல் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன.