கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள்  கரை ஒதுங்கியுள்ளது.

(ரக்ஸனா)  மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறுகடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரைஒதுங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறுகடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று  வியாழக்கிழமை(28.12.2023) காலை கரை ஒதுங்கியுள்ளது.

அப்பகுதி கடலில் புதன்கிழமை மாலை மர்மப் பொருள்ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள்அவதானித்துள்ளனர். இந்நிலையில் அப்பொருள்வியாழக்கிழமை காலை கரை ஒதுங்கியுள்ளதாகமீனவர்கள் தெரிவிக்கின்றர்.

இந்நிலையில் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள பொருள்என்ன என்பது தமக்குத் தெரியாது, இப்பொருள்தொடற்சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால்தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாகஅமையும் எனவே இதனை சம்மந்தப்பட்டவர்கள்அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனைகளுவாஞ்சிகுடி பொலிசாரும் பார்வையிட்டுச்சென்றுள்ளனர் என அப்பகுதி மீனவர்கள்தெரிவிக்கின்றனர்.

இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல்போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின்மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்றஎழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. குறித்தபொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்றுபொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும்பொருத்தப்பட்டுள்ளது.