கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கிழக்கு பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினால் நன்கொடை*

( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை கிழக்குப் பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினால் நன்கொடையாக 1.75 மில்லியன் பெறுமதியான 229 உள்விழி வில்லைகள் (Intraocular Lenses) வழங்கி வைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி  டாக்டர் இரா. முரளீஸ்வரன், மற்றும் கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்.என். நிரோஷன் ஆகியோரிடம் இலங்கை கிழக்குப் பிராந்திய ஸ்ரீ சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தினுடைய தலைவர் ஏ.டி. கஜன்குமார் மற்றும் ஸ்ரீ சத்ய சாயி நிறுவன உறுப்பினர்களினால் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வு  நேற்று முன்தினம் (21)  மணியளவில் நடைபெற்றது.