பலஸ்தீன் துாதுவர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வுகள்.

(அஷ்ரப் ஏ சமத்)  கொழும்பில் உள்ள பலஸ்தீன் துாதுவர் ஆலயத்தில் இவ் வருடமும் கிறிஸ்மஸ் நிகழ்வுகள் பலஸ்தீன் துாதுவர் கலாநிதி செய்யட் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அருட் தந்தை மல்கம் கார்டினர் ரஞ்சித் அவா்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஏனையா நாடுகளின் தூதுவர்கள், கிறிஸ்தவ பாரதியார் கள் பலரும் கலந்து கொண்டு கிரிஸ்மஸ் நிகழ்வுகளை கொண்டாடினார்கள்.

இங்கு மல்கம் கார்டினார் ரன்ஜித் ஆண்டகை உரையாற்றுகையில்
பலஸ்தீன் யுத்த நிறுத்தத்தினை நிறுத்துவதற்கு நேற்று முன்தினம் ஜக்கிய நாடுகள் சபையில் ஒர் தீர்மாணம் எடுத்து அதனை வீட்டோ பலத்தை பாவித்து அமெரிக்கா அதனை தடுத்துள்ளது. அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் அவர்கள் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை விற்பதற்கு அதனை விற்றால் தான் அவர்களது பொருளாதாரம் நிலைத்து நிற்கும் இவ்வாறு தான் உலக நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளை எல்லாம் காலத்துக்கு காலம் மோதலை ஏற்படுத்தி ஆயுதம்  விற்பனை செய்வதாகும். இதே போன்று தான் இலங்கையிலும் மோதலை உருவாக்கினார்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஏற்படுத்தி இங்கு  முஸ்லிம் கிறிஸ்தவ பிரச்சனை ஏற்படுத்த முனைந்தார்கள். நாம் அதனை உணர்ந்தோம். அவ் விடயத்தில் மிகவும் அவதானமாக செயல்பட்டோம்..  பலஸ்தீன் நாட்டில் வாழும் மக்கள் தொடர்ச்சியாக இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் காலத்திலிருந்து அங்கு யுத்தம் நடைபெற்று வருகிறது… அங்கு வாழ்ந்த கிறிஸ்தவ மக்களையும் யூதர்கள் தாக்கினார்கள் அவர்கள் எகிப்து வழியாக அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் இடம் பெயர்ந்தார்கள். நான் 1974 களில் ஜெருசலேம் சென்றிருந்தேன் அங்கு வீடு வாசலை இழந்து ஒர் அரபுத் தாய் அங்கு கதறிக் கொண்டிருந்தார். அவர் அதற்காக நஷ்ட ஈடு கேட்டு அங்கு கதறினார்  அத் அரபுத் தாயிடம் அருகில் சென்ற விசாரித்தேன்  நான் இலங்கை என்னால் அவருக்கு அங்கு உதவ முடியாது.   அதன் பின்னர்  அங்குள்ள அதிகாரிகள் அப் பென்னை அங்குள்ள  அகதி முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். பலஸதீன் மக்கள் 1947 களிலிருந்து பாரிய அவலங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவும் மல்கம் கார்டினர் ரன்ஜித்  அவர்கள்  அங்கு உரையாற்றியதுடன் யுத்தம் நிறைபெற்று சமாதான நிலவ  பிராத்தித்தார்கள்.,
பலஸ்தீன் துாதுவர் அங்கு கிறிஸ்த்துவ சமய அனுஷ்டான நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தார்.