(கனகராசா சரவணன்) வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கபட்டுவரும்; கைதிகள் நேற்று திங்கட்கிழமை (11) இருதடவைகள் பாதுகாப்பு வேலியை உடைத்து தப்பி ஓடிய 130 கைதிகளை கைது செய்துள்ளதாக வெலிகந்த பெலிசார் தெரிவித்தனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகியவர்களை கைது செய்து புனர்வாழ்வுக்காக நீதிமன்ற உத்தரவுக்கமைய சுமார் 500 மேற்பட்டோர் புனர்வாழ்வவு அளிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று மாலை பாதுகாப்பு வேலியை உடைத்து 50 கைதிகள் தப்பிஓடியதையடுத்து அவர்களை பொலிசாருடன் இராணுவத்தினர் இனைந்து கைது செய்தனர் இதனை தொடர்ந்து அன்றைய தினம் இரவு 7 மணியளவில் 80 பேர் மீண்டும் பாதுகாப்பு வேலியை உடைத்து தப்பி ஓடிய நிலையில் இரவு இரவாக இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து தப்பி ஓடிய 130 பேரையும் கைது செய்துள்ளனர்
இதில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் கட்டுபாடுகள் அதிகம் எனவே இங்கு இருக்கமுடியாது தங்களை சிறைச்சாலையில் அடைக்குமாறு கோரியே இவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்ததாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.