கோட்டாவுக்கு நடந்தது போல ரணிலுக்கும் நடக்கப் போகின்றது —

இலங்கை ஆசிரியர் சேவை சங்க தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் எச்சரிக்கை–

(கனகராசா சரவணன்;)

எரிகின்ற விளக்கு இறுதியாக அனைகின்றபோது சுடர்விட்டுதான் இறுதியாக அனைந்துவிடும் கோட்டா ராஜபக்ஸவுக்கும் இதுதான் நடந்தது ஜனாதிபதி ரணிலுக்கும் இது தான் நேரப் போகின்றது ஊடகங்களான நாட்டு மக்களின் குரல்களை நசுக்கி கொண்டிருக்கின்றீர்கள் உங்கள் இறுதிகாலம் நெருங்கிவிட்டது எனவே தேசபந்;து அல்ல எந்த பந்தை விளையாடினாலும் மக்களின் குரலை அடக்கமுடியாது என இலங்கை ஆசிரியர் சேவை சங்க தேசிய அமைப்பாளர்  சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தர்

மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் நேற்று வியாழக்கிழமை (7) ஏற்பாடு செய்திருந்த ஊடக மாகாநாட்டில் சங்க  செயலாளர் செயலாளர் மகிந்த ஜெய்சிங்க தேசிய அமைப்பாளர் சு.பிரதீப் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வரவு செலவு திட்டம் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை மீட்பதற்காக கல்வி சுகாதாரம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஆனால் ரணில் ராஸபஸவின் இந்த வரவு செலவு திட்டமானது புஸ்பவானம் போல் உள்ளது மக்களுடைய பிரச்சனைக்கு எந்த தீர்வும் கிடைக்காத வரியை அறவீடு செய்கின்ற வரவு செலவு திட்டமாகவும்.

உலக நாடுகளில் கல்விக்காக 6 வீதம் வரவு செலவு திட்டத்pல் ஒதுக்கப்படும் நிலையில் இலங்கையில் ஒரு வீதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகின்றது. ஆனால் நமது நாட்டில் இலவச கல்வி, மருத்துவம் இருக்கின்றது ஆனால் பாடசாலையில் மின்சாரம், குடிநீர், தொலைபேசி கட்டனங்களை மாணவர்களிடம் இருந்து அறவிட்டு கட்டவேண்டிய ஏற்பட்டுள்ளது.

பாடசாலையை நிர்வாகம் செய்யும் தகுதியில் இருந்து அரசாங்கம் விடுபட்டு தனியார் மயப்படுத்தலுக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். எனவே அதிபர் ஆசிரியர் சம்பள உயர்வுக்காக மாத்திரம் அல்ல போராடி வருவது 2021 ஆண்டு 124 தொடர் போராட்டம் ஊடாக 25 வருடங்களாக தீர்க்கப்படாத அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டில் 3 இல் ஒருபகுதியை பெற்றுக் கொண்டோம்.

முரண்பாட்டில் மிகுதியான இரண்டினையும் தீர்பார்கள் என 2 வருடமாக எதிர்பர்த்துக் கொண்டிருந்தோம் ஆனால் இந்த ஆட்சியாளர்கள் தங்களின் சுக போகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். தமக்கு தேவையானவர்களுக்கு அமைச்சு பதவியை வழங்குகின்றார்கள் அவர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்கின்றனர். ஆனால் நாட்டின் கண்ணா இருக்க கூடிய கல்வியில் இருக்கின்ற ஆசிரியர் பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்த ஆட்சியாளர்கள் முன்வருவதில்லை எனவே தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த நாட்டின் கல்வியை உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லவேண்டுமாயின் அந்த கல்வியை போதிக்கின்ற ஆசிரியர்களுக்குரிய போதிய சம்பளம் வழங்கப்படவேண்டும்.

கல்வியை தனியார் மயப்படுத்தலுக்கான சட்டதிட்டங்களையும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான சட்டதிட்டங்களை கொண்டு வருகின்றனர் இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கணக்காய்வு திணைக்களம் என கூறிக் கொண்டு வலுக்கட்டாயப்படுத்தி அதிபர் ஆசிரியர்களை பாடசாலை விட்டும்; பின்னர் மாலை 6 மணிவரை இருக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர் இதனை நாங்கள் எதிர்பதுடன் கட்டாயப்படுத்தி செய்யமுடியாது என தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாடசாலையின் பொறுப்பை பெற்றோரிடம் திணிக்கப்பட்டுள்ளது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மாணவர்களுக்கு புத்தகப்பையை கூட வாங்கமுடியாது பெற்றோர் உள்ளனர் எனவே வரவு செலவு திட்டத்தில் உரிய நிதியை ஒதுக்கி பாடசாலையை கொண்டு செல்லவேண்டிய கடமையை அரசாங்கம் செய்யவேண்டும்.

மக்கள் பொருளாதார ரீதியில் பாதிகப்பட்டுள்ளபோது அதனை சமூகவலைத் தளங்களில் வெளிப்படுத்தும் போது அதனை ரணில்ராஜபக்ஸ அரசாங்கம் அதனை தடைசெய்ய சட்டங்களை கொண்டு வருகின்றனர்.

ரணில் ஊடகங்களை நாட்டு மக்களின் குரல்களை நசுக்கி கொண்டிருக்கின்றீர்கள் உங்கள் இறுதிகாலம் நெருங்கிவிட்டது எனவே இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பி மக்களை நேசிக்கின்ற அரசாங்கத்தை அமைத்து பிரச்சனைகளை தீர்க்க தயாராக இருக்கின்றோம் என்றார்.