மட்டக்களப்பு கைதுகள் மனித உரிமைகள் கண்காணிப்பகம் நீண்ட அறிக்கை

இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட HRW, 1983-2009 உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் இலங்கை அதிகாரிகள் ஒன்பது இனத் தமிழர்களை  பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று தெரிவித்துள்ளது.

சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) மாற்றியமைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுவித்து, குறிப்பிட்ட சட்டத்தை  ரத்து செய்யும் வரையில் அதனை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

“உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இலங்கை அதிகாரிகள் பயன்படுத்துவதுடன் கொடூரமான துஷ்பிரயோகத்துடன அரசாங்கம்  ஒரு சமூகத்தை மேலும் ஓரங்கட்டுகிறது” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி  தெரிவித்துள்ளார்.. “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘நல்லிணக்கம்’ பற்றி பேசுகிறார், ஆனால் அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப் பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகின்றன.”

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் நவம்பர் 25 மற்றும் 27 க்கு இடையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிதாகஅதிகாரிகள் கைதுசெய்ததுடன், தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன்  நினைவேந்தல் ஊர்வலத்தில் இருந்து அலங்காரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்தனர். அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் 2009 இல் பிரிவினைவாத ஆயுதக் குழுவின் முழுமையான தோல்வியுடன் முடிவுக்கு வந்ததிலிருந்து, போரில் இறந்தவர்களை பகிரங்கமாக தமிழர்கள் நினைவுகூருவதை அடுத்தடுத்த  அரசாங்கங்கள் தடுத்தன.

டிசம்பர் 2 ஆம் தேதி, வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒதியமலையில் 1984 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவம் தமிழ் கிராம மக்களை படுகொலை செய்ததை நினைவுகூரும் வகையில், இந்து ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வை பொலிசார் முடக்கியதாக கூறப்படுகிறது. சிறுபான்மையினர் இறந்தவர்களை நினைவுகூரும் விழாக்களை நடத்துவதைத் தடுப்பது மதம், நம்பிக்கை, கருத்து, கருத்துச் சுதந்திரம் மற்றும் கூட்டுறவுக்கான உரிமைகளை மீறுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.