(ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு- செலவுத் திட்ட அறிக்கை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
கல்முனை மாநகர சபையின் பிரதான அலுவலக முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த வரவு- செலவுத் திட்ட அறிக்கையை அலுவலக நேரத்தில் பொது மக்கள் பார்வையிட முடியும்.
மேலும், இதில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பிலான தமது கருத்துகளை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை எழுத்து மூலம் சமர்ப்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.