கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து இரண்டு வருட பூர்த்தி துஆ பிரார்த்தனை.

(ஹஸ்பர்)   கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிங்குட்பட்ட குறிஞ்சாக்கேணி இயந்திரப் படகு விபத்தில் உயிா்நீத்த உறவுகளை நினைவு கூா்ந்து துஆப்பிராத்தனை மேற்கொள்ளும் நிகழ்வு இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு (23)  காலை 8 மணியளவில் கிண்ணியா பிரதேசசெயலாளா் எம்.எச்.எம்.கனி அவா்களின் தலைமையில் குறிஞ்சாக்கேணி பால முன்றலில் இடம்பெற்றது .
இதன்போது பாலத்தின் தற்போதைய நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது அதனால் பயணம் செய்வதால் ஏற்படப்போகும் அனா்த்தங்கள் தொடா்பாக விழிப்பூட்டப்பட்டது.இதன் போது இவ் விபத்தில் 8 உயிர்கள் பழியாகின.
பாலத்தினை நிா்மாணிப்பதற்கான நிதியினை சவூதி நிதியம் வழங்கவுள்ளதாகவும் அதற்கான கடிதத்தினை வீதி அபிவிருத்தி அதிகாரசபை தங்களுக்கு அறியத்தந்துள்ளதையும் தெளிவுபடுத்தியிருந்தாா்.
இதில் பலர் கலந்து கொண்டு துஆபிரார்த்தனையில் ஈடுபட்டனர்.