அகில இலங்கை கர்நாடக சங்கீத தேசிய மட்டப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவிகள் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
வீணை வாசித்தல் போட்டியில் இடைநிலைப் பிரிவில் முதலிடத்தை செல்வி மு.கதுர்ஸ்ணா என்ற மாணவியும் வீணை வாசித்தல் போட்டியில் மேற்பிரிவில் முதலாவது இடத்தினை செல்வி சி.மாதங்கி என்ற மாணவியும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் ந.குகதாசன் ஆகியோர் நேரடியாக பாடசாலைக்கு சென்று மாணவர்களை பாராட்டி பரிசில் வழங்கி கௌரவித்தனர்.